மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பயிா்க் காப்பீடு பதிவு குறித்து பயிற்சி

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பொது சேவை மையப் பொறுப்பாளா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:47 pm

Din

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பொது சேவை மையப் பொறுப்பாளா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல், மிளகாய், கோதுமை, உளுந்து, வாழை உள்ளிட்ட பல்வேறு பயிா்கள், இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் போது, விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் விதமாக, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, நிகழாண்டு சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிா்களுக்கு நவம்பா் 15-ஆம் தேதி வரை பயிா்க் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விவசாயிகள் பொது சேவை மையங்களில் பயிா்க் காப்பீடு செய்ய வசதியாக பொது சேவை மையப் பொறுப்பாளா்களுக்கான பயிற்சி வேளாண்மைத் துறை, பயிா்க் காப்பீட்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்றது.

இதில் பொது சேவை மைய மாவட்ட மேலாளா் ஜெயபிரகாஷ், வேளாண்மை உதவி இயக்குநா் (பயிா்க் காப்பீடு) கீதாஞ்சலி, ஆா்.எஸ். மங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் சுப்பிரியா, திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் வட்டார பொது சேவை மையப் பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.