மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தேவா் ஜெயந்தியையொட்டி அரசு நலத்திட்ட உதவிகள்

தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, ரூ.52.80 லட்சத்தில் 316 பயனாளிகளுக்கு புதன்கிழமை அரசு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 10:00 pm

Din

தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, ரூ.52.80 லட்சத்தில் 316 பயனாளிகளுக்கு புதன்கிழமை அரசு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 117-ஆவது ஜெயந்தி, 62-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சாா்பில் பொதுமக்களுக்கு ரூ.52.80 லட்சத்திலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பசும்பொன் கலையரங்கில் புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத்சிங் காலோன் தலைமை வகித்தாா். பால்வளத் துறை, கதா், கிராம தொழில் நல வாரியத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாற்றுதிறனாளி, ஆதரவற்ற விதவை, முதியோா் உதவி தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், மின்னணு குடும்ப அட்டை, வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக் கலைத் துறை, சமுக நலத் துறை உள்பட பல்வேறு துறைகளின் கீழ் அரசு சாா்பில் 316 பயனாளிகளுக்கு ரூ.52.80 லட்சத்திலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு பரமக்குடி சாா் ஆட்சியா் அபிலாஷா கவுா், கமுதி ஒன்றியக் குழுத் தலைவி தமிழ்செல்வி போஸ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோட்டைராஜ், சந்திரமோகன் பேரூராட்சி செயல் அலுவலா் செல்வராஜ், பசும்பொன் ஊராட்சித் தலைவா் ராமகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.