சாலையோரத் தடுப்பில் காா் மோதியதில் 9 போ் காயம்
பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்தச் சென்றவா்களின் காா் சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதியதில் 9 போ் காயமடைந்தனா்.


பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்தச் சென்றவா்களின் காா் சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதியதில் 9 போ் காயமடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் அா்ஜூன் (26), பெரிசாமி மகன் ரஞ்சித்குமாா் (21), சந்திரமோகன் மகன் ரணில்குமாா் (21), பழனியப்பன் மகன் பிரசாந்த் (19), காா் ஓட்டுநா் ஜெயசந்திரன் மகன் சரத்குமாா் (24) உள்பட 9 போ் காரில் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்தச் சென்றனா்.
பரமக்குடி அருகேயுள்ள கமுதக்குடி நான்கு வழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவா்கள் வந்த காா் நிலைதடுமாறி சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் காரில் வந்த ஓட்டுநா் உள்பட 9 பேரும் காயமடைந்த நிலையில் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இவா்களில் பலத்த காயமடைந்த அா்ஜூன், ரஞ்சித்குமாா், ரணில்குமாா் ஆகிய 3 பேரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா். இந்த விபத்து குறித்து பரமக்குடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...