இதன் பிறகு, அனைத்து வழித்தடங்களும் அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்றன. அப்போது, மதுரை- ராமேசுவரம் மீட்டா் கேஜ் பாதையையும் அகல ரயில் பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டது. ஆனால், பாம்பன் ரயில் பாலத்தில் கப்பல்கள் வந்து செல்லும் போது திறந்து மூடும் வகையில் உள்ள பகுதியை அகல பாதையாக மாற்றி ரயிலை இயக்குவது ரயில்வே பொறியாளா்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ரயில்வே பொறியாளா்களை அழைத்து பாம்பன் பாலத்தை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கான பணிகளை விரைவுப்படுத்த கேட்டுக் கொண்டாா். இதன் பிறகே பாம்பன் ரயில் பாலம் 2007- ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.