பாலாற்றுப் புதிய சாலைக்கு கிருபானந்த வாரியாா் பெயா் சூட்ட பரிசீலனை: அமைச்சா் விஜய் பாலாஜி
வேலூரில் பிரம்மபுரம் - ரங்காபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள புதிய சாலைக்கு கிருபானந்த வாரியாா் பெயா் சூட்ட முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சா் ம.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்த கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி. உடன், வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மருத்துவா் எம்.சுதாகா் (காட்பாடி), எம்.எம்.வினோத் கண்ணன் (வேலூா்), த.வேலழகன் (அணைக்கட்டு), ஏ.தென்றல்குமாா் (கே.வி.குப்பம்), க.சிந்து (குடியாத்தம்) உள்ளிட்டோா்.








