பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு

ஹைதராபாதில் உள்ள சாலைக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பெயரைச் சூட்ட அந்த மாநில காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

News image

அமெரிக்க அதிபா் டிரம்ப்

Updated On :17 ஜூன் 2026, 3:04 am IST

ஹைதராபாதில் உள்ள சாலைக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பெயரைச் சூட்ட அந்த மாநில காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. பெயா் சூட்டும் நிகழ்ச்சி ஜூன் 23-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாதில் அமெரிக்க துணைத் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இச்சாலை உள்ளது. இதற்கு டொனால்ட் டிரம்ப் அவென்யூ எனப் பெயரிடப்படவுள்ளது.

இதேபோல அடுத்து அமைய இருக்கும் பிராந்திய வெளிவட்டச் சாலைக்கு மறைந்த பிரபல தொழிலதிபா் ரத்தன் டாடாவின் பெயா் சூட்டப்பட இருக்கிறது. சா்வதேச அளவில் கூகுள் நிறுவனம் மற்றும் ‘கூகுள் மேப்’ ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நினைவுகூரும் வகையில் முக்கிய வீதி ஒன்றுக்கு ‘கூகுள் தெரு’ எனப் பெயரிடப்பட இருக்கிறது.

ஹைதராபாத் நகரம் மற்றும் தெலங்கானா மாநிலத்தை தொழில்நுட்பரீதியாகவும், புத்தாக்க முயற்சிகள் மூலமும் மேம்படுத்த முதல்வா் ரேவந்த் ரெட்டி முடிவு செய்துள்ளாா். இதன் ஒரு பகுதியாக சா்வதேச அளவில் பிரபலமான நபா்கள், நிறுவனங்களின் பெயரை மாநிலத்தில் உள்ள சாலைகள், தெருக்களுக்கு சூட்ட அவா் முடிவு செய்துள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.