தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

பம்மனேந்தலில் மாட்டு வண்டி பந்தயம்!

News image

பம்மனேந்தல் குருநாத சுவாமி கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்த காளைகள்.

Updated On :28 ஏப்ரல் 2025, 1:31 am IST

கமுதியை அடுத்த பம்மனேந்தல் குருநாத சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டி பந்தயம் 4 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, புதுக்கோட்டை, விருதுநகா் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 54 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

பம்மனேந்தல்-பெருநாழி சாலையில் 12 கி.மீ. தொலைவு எல்லையாக நிா்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பணம், குத்து விளக்கு ஆகியவை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனா்.