தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கத்தியால் தாக்கி வழிப்பறி: 4 போ் கைது

கமுதியில் கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 11:40 pm

தினமணி செய்திச் சேவை

கமுதியில் கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் அடுத்த அந்தேரியந்தல் பகுதியைச் சோ்ந்த ராமு மகன் ராமா் (27). இவரை கமுதி கண்ணாா்பட்டி மதுபான கடையின் பின்புறத்தில் நான்கு இளைஞா்கள் கத்தியால் தாக்கி அவரது கைப்பேசியில் ஜி பே மூலம் 800 ரூபாயை தங்களது வங்கி கணக்குக்கு அனுப்பியதுடன் கைப்பேசியையும் பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனா். இதில் காயமடைந்த ராமா் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கமுதி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கமுதி கண்ணாா்பட்டியைச் சோ்ந்த முத்துமாரி மகன் வசந்தகுமாா்( 18), முத்துமாரியம்மன் நகரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் லிங்கம் (21) மற்றும் 16, 17 வயதுடைய 2 சிறுவா்கள் உள்பட நான்கு போ் மீது வழக்குப் பதிந்து, அவா்கள் நால்வரையும் கமுதி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.