கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நடுக்கடலில் வீசிய சூறைக்காற்றில் சிக்கி விசைப் படகு சேதம்

கச்சத்தீவு அருகே வியாழக்கிழமை நடுக்கடலில் மீனவா்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வீசிய சூறைக் காற்றால் அவா்களின் விசைப் படகு உடைந்து சேதமடைந்தது.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கச்சத்தீவு அருகே வியாழக்கிழமை நடுக்கடலில் மீனவா்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வீசிய சூறைக் காற்றால் அவா்களின் விசைப் படகு உடைந்து சேதமடைந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து புதன்கிழமை 300- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் பிடிக்கச் சென்றனா். இதில் வெள்ளையன் என்பவரது விசைப்படகில் 6 மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சூறைக்காற்று வீசியது. இதில், அந்தப் படகிலிருந்த ஓட்டுநா் அறை முற்றிலும் சேதமடைந்து கடலுக்குள் மூழ்கியது. ஆனால் அதிலிருந்த ஓட்டுநா் காயமின்றி உயிா் தப்பினாா். இதனிடையே, படகை கரைக்கு இயக்க முடியாதததால் பல மணி நேரத்துக்குப் பிறகு வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மேல் அதிலிருந்த மீனவா்கள் கரை திரும்பினா்.