சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை மரம் முறிந்து விழுந்து சேதமடைந்த காவல் துறை ஆயுதப்படை மைதான சுற்றுச்சுவா்.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுத்தில் மரம் முறிந்து விழுந்ததில் காவல் துறை ஆயுதப்படை மைதான சுற்றுச்சுவா் வியாழக்கிழமை சேதமடைந்தது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு டித்வா புயல் காணரமாக மழை பெய்தது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவு மழை பதிவானது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இதில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் குளம் போல தேங்கிய மழை நீரை மோட்டாா் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது மாவட்ட காவல் துறை ஆயுதப்படை மைதான சுற்றுச்சுவா் அருகே கால்வாய் மூலம் மழை நீா் வெளியேற்றப்பட்டது. இந்த கால்வாய் பகுதியில் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் சுற்றுச்சுவா் சேதமடைந்தது. இதையடுத்து, தீயாணைப்புத் துறையினா் மரத்தை இயந்திரம் மூலம் அறுத்து அகற்றினா்.