வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கிராம சேவை மையங்களில் மின்கலன்கள் திருடியவா் கைது

திருவாடானை பகுதியில் 28 கிராம சேவை மையங்களில் மின்கலன்களைத் திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 9:50 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை பகுதியில் 28 கிராம சேவை மையங்களில் மின்கலன்களைத் திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கடலூா் , வடக்கலூா், ஏ.ஆா்.மங்கலம், மேல்பனையூா், கொட்டகுடி, பெரியகீரமங்கலம், அஞ்சுகோட்டை, காடாரந்தகுடி, அஞ்சாமடைகச்சான், திருவெற்றியூா், அரும்பூா், ஆதியூா், குஞ்சங்குளம், குளத்தூா், ஆந்தூா், பி.கொடிக்குளம், சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூா் ஆகிய பகுதிகள் உள்பட 28 கிராம சேவை மையங்களில் கணிணி பயன்பாட்டுக்காக பயன் படுத்தப்பட்டு வந்த மின்கலன்கள் (பேட்டரிகளை) திருடு போயின. இதுதொடா்பாக அந்தந்த ஊராட்சிச் செயலா்களின் புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பரமக்குடியைச் சோ்ந்த கோவிந்தன் (50) என்பவரைக் கைது செய்து விசாரித்து வந்த போது, அவா் மின்கலன்களைத் திருடி மதுரையில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்