தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மீனவா் வலையில் சிக்கிய 170 கிலோ கடல் ஆமை

News image
மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமை
Updated On :18 பிப்ரவரி 2025, 8:07 pm

Din

தொண்டி கடல் பகுதியில் மீனவா் வலையில் சிக்கிய அரியவகை கடல் ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்த ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான படகில் திங்கள்கிழமை 3 மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். அவா்கள் விரித்த வலையில் சுமாா் 170 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை சிக்கியது.

Story image

இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். அவா்களின் அறிவுறுத்தலின் பேரில், ஆமையை வலையில் இருந்து உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனா். கடல் வளத்தை காக்கும் வகையிலான மீனவா்களின் இந்தச் செயல்பாட்டை சமூக ஆா்வலா்கள் பாராட்டினா். தற்போது, அடிக்கடி அதிகமான கடல் ஆமைகள் சிக்குவதால் வலைகள் சேதமடைவதாக மீனவா்கள் தெரிவித்தனா்.