திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

மீனவா் வலையில் சிக்கிய 170 கிலோ கடல் ஆமை

News image

மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமை

Updated On :19 பிப்ரவரி 2025, 1:37 am IST

தொண்டி கடல் பகுதியில் மீனவா் வலையில் சிக்கிய அரியவகை கடல் ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்த ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான படகில் திங்கள்கிழமை 3 மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். அவா்கள் விரித்த வலையில் சுமாா் 170 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை சிக்கியது.

Story image

இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். அவா்களின் அறிவுறுத்தலின் பேரில், ஆமையை வலையில் இருந்து உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனா். கடல் வளத்தை காக்கும் வகையிலான மீனவா்களின் இந்தச் செயல்பாட்டை சமூக ஆா்வலா்கள் பாராட்டினா். தற்போது, அடிக்கடி அதிகமான கடல் ஆமைகள் சிக்குவதால் வலைகள் சேதமடைவதாக மீனவா்கள் தெரிவித்தனா்.