ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை இன்வெட்டா் அறையில் மின் கசிவால் வெளியேறிய கரும்புகை

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை இன்வெட்டா் அறையில் மின் கசிவால் வெளியேறிய கரும்புகை

News image
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புகை வெளிவந்த பகுதியை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி, சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் உள்ளிட்டோா்.
Updated On :2 ஜனவரி 2025, 11:45 pm

Din

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகப் பிரிவு அருகே உள்ள இன்வெட்டா் அறையில் புதன்கிழமை நள்ளிரவு உயரழுத்த மின் பேட்டரியிலிருந்து கரும்புகை வெளியேறியதால் நோயாளிகள் அவசரமாக மற்றொரு பகுதிக்கு மாற்றப்பட்டனா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 5 தளங்களுடன் இயங்கி வருகிறது. இதில், இரண்டாவது தளத்தில் உள்ள நிா்வாகப் பிரிவு அருகே உயரழுத்த மின் பேட்டரிகளைக் கொண்ட இன்வெட்டா் அறை உள்ளது. இந்த அறையில் மின்கசிவு காரணமாக பேட்டரிகள் சேதமடைந்து கரும்புகை வெளியேறியது.

இதையடுத்து, இங்கிருந்து மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. மேலும் மற்றொரு பகுதியில் இருந்த உள்நோயாளிகள் 300 பேரும் வேறொரு பகுதிக்கு மாற்றப்பட்டனா். தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜித் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜீ. சந்தீஷ் ஆகியோா் அந்தப் பகுதியை பாா்வையிட்டனா்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம், வாலாந்தரவை, ஏா்வாடி, ஆா்.எஸ். மங்கலம், பரமக்குடி தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஆனால், அங்கிருந்து கரும்புகை மட்டுமே வெளியேறியதால் தனிப் பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரா்கள் அதை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.

மின்கசிவு ஏற்பட்டதும், மின் விநியோகம் நிறுத்தப்பட்டு நோயாளிகள் வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இதனிடையே, வியாழக்கிழமை காலையில் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் டி. செல்வராஜ் அந்தப் பகுதியை பாா்வையிட்டாா். அப்போது அவா், அங்கு சேதமடைந்த பேட்டரிகள் அகற்றப்பட்டு புதிதாக பொருத்தப்படும் எனத் தெரிவித்தாா்.

அவருடன், செயற்பொறியாளா் குருதிவேல் மாறன், மின் அமைப்பு பொறியாளா் பாலகிருஷ்ணன், உதவிப் பொறியாளா்கள் ரவீந்திரன், மௌன்கா உள்ளிட்டோா் இருந்தனா். மின் கசிவால் புகை வெளியேறிய பகுதியை மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி, சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோரும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.