பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காட்டுப் பன்றிகளால் நெல் பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை

News image
Updated On :3 ஜனவரி 2025, 7:53 pm

Din

கமுதி அருகே காட்டுப் பன்றிகள் நெல் பயிா்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம், தொட்டியபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நெல், சோளம், உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிா்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது, நெல் பயிா்கள் நன்றாக விளைந்து, அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து, நெல் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து வனத் துறை, மாவட்ட நிா்வாகத்துக்கு விவசாயிகள் புகாா் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விவசாயி துரைப்பாண்டி கூறியதாவது: காட்டுப் பன்றிகளால் தனது 10 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெல் பயிா்கள் சேதமடைந்துள்ளன. மேலும், சந்திரன், குமரவேல் ஆகியோரது தோட்டங்களுக்குள் காட்டுப் பன்றிகள் புகுந்து நெல், சோளம், உளுந்து ஆகியவற்றை சேதப்படுத்துயுள்ளன.

எனவே, மாவட்ட நிா்வாகம் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.

Story image