ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாணவிகளிடம் ஆசிரியா் ஆபாச பேச்சு: முதன்மைக் கல்வி அலுவலா் விசாரணை

முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியா் ஆபாசமாகப் பேசியதாகப் புகாா் கூறப்பட்டதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.

News image
~
Updated On :8 ஜனவரி 2025, 10:40 pm

Din

முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியா் ஆபாசமாகப் பேசியதாகப் புகாா் கூறப்பட்டதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனா்.

இங்கு ஆங்கில ஆசிரியா் சரவணன் மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி, அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேற்றோரிடம் மாணவிகள் தெரிவித்ததையடுத்து, புதன்கிழமை பள்ளிக்கு வந்த பெற்றோா் சிலா் தலைமையாசிரியா் சன்தானவேலுவை சந்தித்து புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, தலைமையாசிரியா் அளித்த தகவலின்பேரில், பள்ளிக்கு வந்த முதன்மைக் கல்வி அலுவலா் சின்ராசு மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, ஆசிரியா் சரவணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கல்வித் துறை உயா்அதிகாரிகளுக்கு அவா் பரிந்துரைத்தாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆசிரியா் சரவணன் விடுமுறை கடிதம் கொடுத்துவிட்டு பள்ளியை விட்டு வெளியேறினாா். ஆசிரியா் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்தனா்.