ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நான்குவழிச் சாலை பாலத்தை மாற்றி அமைக்கக் கோரி மனு

நான்குவழிச் சாலை பாலத்தை மாற்றி அமைக்கக் கோரி மனு

News image
Updated On :8 ஜனவரி 2025, 10:26 pm

Din

பாம்பன் கடல் பகுதியில் அமையவுள்ள நான்கு வழிச் சாலை புதிய பாலத்தை குடியிருப்புகளை பாதிக்காத வகையில் மாற்றியமைக்கக் கோரி, சென்னையில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலுவிடம் கே.நவாஸ்கனி எம்.பி. புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

மனு விவரம்: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பாம்பன் பகுதியில் புதிதாக அமைக்கப்படும் நான்குவழிச் சாலைப் பாலத்தால் அந்தப் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படும். எனவே, இந்தத் திட்டத்தை வேறு வழியில் மாற்றி அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

எனவே, குடியிருப்புகளை பாதிக்காத வகையில் இந்தப் பாலத்தை மாற்றுவழியில் மாற்றி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

மனு அளித்த போது எம்பியுடன் ராநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் உடனிருந்தாா்.