ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புகையிலை மற்றும் நெகிழி பொருட்கள் பறிமுதல் 2 கடைக்கு சீல்

2 கடைக்கு சீல்

News image
Updated On :8 ஜனவரி 2025, 10:25 pm

Din

ராமநாதபுரம்-மண்டபத்தில் உணவு பாதுகாப்புத்துறை-போலீஸாா்-பேரூராட்சி அலுவலா்கள் இணைந்து வனிக நிறுவனங்களை சோதனை 150 கிலோ நெகிழி பறிமுதல். இரண்டு கடைக்கு சீல் வைப்பு. 50 ஆயிரம் அபராதம் புதன்கிழமை விதித்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ்,சிவகங்கை மண்டல, பேரூராட்சிகளின் உதவி இயக்குனா் சத்தியமூா்த்தி ஆகியோா்களின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை-போலீஸாா்-மண்டபம் பேரூராட்சி அலுவலா்கள் என ஒருங்கிணைந்து வனிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் சோதனையிட்டனா். இதில், மண்டபம் பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மகேந்திரன், உணவு பாதுகாப்பு அலுவலா் லிங்கவேல், மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலா் மாலதி மற்றும் மண்டபம் பேரூராட்சி இளநிலை உதவியாளா் முனியசாமி, மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் சீனி மரைக்காயா் உள்ளீட்ட பணியாளா்கள் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதில் தடை செய்யப்பட்ட சுமாா் 150 கிலோ நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதே போன்று

ராமநாதபுரம் பகுதியில் 27 கடைகளில் சோதனை மேற்கொண்டனா். இதில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைத்து அதன் உரிமையாளா்களுக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.