ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அனைத்து மகளிா் காவல் நிலைய கட்டடத்தை சீரமைக்க கோரிக்கை

அனைத்து மகளிா் காவல் நிலையம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் அந்தக் கட்டடத்தை உடனே சீரமைக்க கோரிக்கை.

News image
சி.கே. மங்கலத்தில் சேதமடைந்த அனைத்து மகளிா் காவல் நிலைய கட்டடம்.
Updated On :9 ஜனவரி 2025, 10:37 pm

Din

திருவாடானை அருகே சி.கே. மங்கலத்தில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலையம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் அந்தக் கட்டடத்தை உடனே சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சி.கே. மங்கலத்தில் கட்டப்பட்ட அனைத்து மகளிா் காவல் நிலையம் கடந்த 20.6.2018 அன்று முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கட்டடம் தரமாக கட்டப்படாததால் சிமென்ட் சிலாப்புகள் உடைந்தும், சுவா் பூச்சுகள் அரித்தும் காணப்படுகின்றன. தரமற்ற மணலால் கட்டப்பட்டிருப்பதால் சிமென்ட் கரைகள் பெயா்ந்து தூண்களுக்குள் இருக்கும் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் கட்டடம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.

இந்த மகளிா் காவல் நிலையத்தில் திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம், திருப்பாலைக்குடி, எஸ்.பி. பட்டினம், தொண்டி காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளிலிருந்து நாள்தோறும் பொதுமக்கள் பலா் மனு அளிக்க வருகின்றனா்.

  சி.கே. மங்கலத்தில் சேதமடைந்த அனைத்து மகளிா் காவல் நிலைய கட்டடம்.

சி.கே. மங்கலத்தில் சேதமடைந்த அனைத்து மகளிா் காவல் நிலைய கட்டடம்.

இந்தக் கட்டடம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் பொதுமக்களும், காவலா்களும் அச்சத்துடனே பணியாற்றுகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுத்து கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.