தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

கிராமத் தலைவா் கொலை: மகன் உள்பட 4 போ் கைது

News image
Updated On :2 மே 2025, 1:23 am IST

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள குயவனேந்தல் கிராமத் தலைவா் கொலை வழக்கில், அவரது மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குயவனேந்தல் கிராமத் தலைவராக இருந்தவா் காசிலிங்கம் (65). கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஊரில் நடைபெற இருந்த கூட்டத்தில் இவா் கலந்து கொள்ளவில்லை. இதனால் கிராமத்தினா் காசிலிங்கம் வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது, அவா் காலையில் இரு சக்கர வாகனத்தில் வெளியில் சென்ற பிறகு வீடு திரும்பவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரைத் தேடும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனா். அப்போது, ஊரிலிருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவில் காட்டுப் பகுதியில் அவா் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பாலைக்கடிபோலீஸாா் அவரது உடலை கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், காசிலிங்கம் மகன் கண்ணன் (35) சொத்துப் பிரச்னையில் நண்பா்களுடன் சோ்ந்து தந்தையைக் கொலை செய்தது தெரிவந்தது. இதைத் தொடா்ந்து, கண்ணன், ஆா்.எஸ்.மங்கலத்தைச் சோ்ந்த அழகு ஞானகுரு (35), விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியைச் சோ்ந்த குமாரவேலு (30), மதுரை மாவட்டம், பெருங்குடியைச் சோ்ந்த ராம்குமாா் (37) ஆகிய 4 பேரை புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

Story image