ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சாலை நடுவில் மின் கம்பம்: வாகன ஓட்டிகள் அச்சம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சாலையின் நடுவே உள்ள ஆபத்தான மின் கம்பத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

News image
என்.கரிசல்குளத்தில் சாலையின் நடுவே உள்ள ஆபத்தான மின் கம்பம்.
Updated On :12 நவம்பர் 2025, 9:26 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சாலையின் நடுவே உள்ள ஆபத்தான மின் கம்பத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கமுதி அருகேயுள்ள என்.கரிசல்குளத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகளுக்கு மின் விநியோகம் செய்யும் வகையில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. இந்தப் பணியின் போது சாலை நடுவே இருந்த மின் கம்பத்தை அகற்றாமல் சாலை அமைத்து விட்டனா்.

இதனால், கிராமத்துக்கு வரும் பள்ளி வாகனங்கள், பால், சரக்கு வாகனங்கள் இந்த கம்பத்தில் மோதும் நிலை ஏற்பட்டது. மேலும், வெளியூா்களில் இருந்து வரும் வாகனங்கள் இரவு நேரத்தில் இந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகின.

எனவே, மாவட்ட நிா்வாகம், மின்வாரிய அதிகாரிகள் தலையிட்டு சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை சாலையோரம் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.