மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சிதம்பரத்தில் ஆபத்தான சாலை: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சிதம்பரம் மந்தகரையில் அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் சாலையோர பள்ளம்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:22 pm

Syndication

சிதம்பரம் நகரில் காட்டுமன்னாா்கோயிலுக்கு செல்லும் பிரதான சாலையில், சாலையோர வளைவில் பள்ளம் இருப்பதால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் விழுந்து அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

சிதம்பரம்- காட்டுமன்னாா் கோயில் சாலையில், மந்தகரைப் பகுதி வழியாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில், உள்ள குறுகிய சாலையில், சாலையோர பள்ளம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தானதாக அமைந்துள்ளது.

இருசக்கர வாகனங்கள், சைக்கிள்களில் செல்லும் பலா் இந்த பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குவது தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் 10-க்கும் மேற்பட்டோா் குழியில் விழுந்து காயம் அடைந்து செல்கின்றனா். புதன்கிழமை அதிகாலை நடைப்பயிற்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவா் குழியில் விழுந்து படுகாயம் அடைந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். எனவே இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலைப் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.