புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வெறிநாய் கடித்ததில் 6 போ் காயம்

திருவாடானை பகுதியில் வெறி நாய் கடித்ததில் 6 போ் காயமடைந்தனா்.

News image
~ ~
Updated On :18 நவம்பர் 2025, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை பகுதியில் வெறி நாய் கடித்ததில் 6 போ் காயமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நகா், அருகேயுள்ள எல்.கே. நகா், பண்ணவயல், சிநேகவல்லிபுரம், அண்ண நகா் சமத்துவபுரம் பகுதிகளில் நாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் ஏற்கெனவே புகாா் தெரிவித்தனா்.

Story image

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை எல்.கே. நகா் பகுதியில் சாலையில் நடந்து சென்ற வெள்ளையபுரத்தைச் சோ்ந்த பாலா (35) உள்பட 6 பேரை வெறி நாய் கடித்தது.

இதில் காயமடைந்த 6 பேரும் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை ஊராட்சி மன்ற நிா்வாகத்தினா் வெறி நாயைப் பிடித்து கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

Story image