தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

சாயல்குடியில் 100 சதவீதம் வாக்களிப்போம் உறுதிமொழி ஏற்பு

சாயல்குடியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் வியாழக்கிழமை உறுதிமொழி எடுத்தனா்.

News image

சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட பேரூராட்சி பணியாளா்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:27 pm

சாயல்குடியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் வியாழக்கிழமை உறுதிமொழி எடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், சாயல்குடி பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் இணைந்து வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் உதவித் திட்ட அலுவலா் கே.பி.சத்ய சொரூபன் தலைமை வகித்தாா். சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலா் எஸ். திருப்பதி முன்னிலை வகித்தாா்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் சரளாதேவி, சுபத்ரா, மகேந்திரகுமாா், சாயல்குடி பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.