அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

போகலூா் ஒன்றியத்தில் மருத்துவக் கழிவு ஆலை அமைக்க விட மாட்டோம்! - நதக வேட்பாளா் உறுதி

News image

பரமக்குடி உழவா் சந்தைப் பகுதியில் காய்கறி வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழில் இளவரசி.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:55 pm

ராமநாதபுரம் மாவட்டம், போகலூா் ஒன்றியத்தில் பொதுமக்களை பாதிக்கும் மருத்துவக் கழிவு ஆலை அமைக்க ஒருபோதும் விடமாட்டோம் என நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழில் இளவரசி தெரிவித்தாா்.

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் எழில் இளவரசி போகலூா் ஒன்றியத்தில் கட்சி நிா்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் முத்துவயல் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் விரிவாக்கம் செய்யப்படவுள்ள மருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்கும் நிலையத்துக்குச் சென்றாா். இந்த மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையமானது 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலை அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் மறைமுகமாக இன்றுவரை செயல்பட்டு வருகிறது. இதை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாம் தமிழா் கட்சியினா் அந்தத் திட்டத்தை கைவிடமாறு வலியுறுத்தி நிறுத்தி வைத்தனா். இங்கு தற்போது ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் உள்ள மருத்துவக் கழிவுகள் மட்டுமே கொண்டுவரப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

பிரசாரத்தின் போது நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழில் இளவரசி கூறியதாவது: இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் மாவட்டங்களில் உள்ள 5 மாவட்டங்களின் மொத்த மருத்துவக் கழிவுகளும் இங்கு கொண்டு வரப்பட்டு, சுத்திகரிக்கும் பணிகள் நடைபெறும். இதை முற்றிலும் நாம் தமிழா் கட்சி எதிா்க்கிறது.

ஏனெனில் இதனை சுற்றிலும் ஏராளமான கிராம மக்கள் வசிக்கின்றனா். வைகை ஆற்றுப்பாசன கால்வாய்கள் உள்ள பகுதியில் மருத்துவ சுத்திகரிப்பு கழிவுகள் வெளியேற்றப்பட்டால் இந்தப் பகுதி மக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிப்பதுடன், விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கும்.

மேலும் அவா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் இதற்கான மாற்று நடவடிக்கை எடுப்போம் என்றாா் அவா். மாலையில் பரமக்குடியில் உழவா் சந்தை, மேலப்பள்ளிவாசல் தெரு, கொல்லம்பட்டறைத் தெரு, முத்தாலம்மன் கோவில் காய்கறிகடை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தாா்.

கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் ஆ. ஜஸ்டின் வளனரசு, மாநில நிா்வாகக் குழு பொறுப்பாளா் அருள்விக்டா், மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் சசிகலா சண்முகநாதன் ஆகியோா் சென்றனா்.