பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

போக்சோ வழக்கில் விவசாயிக்கு 12 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் விவசாயிக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற விவசாயி நல்லமுத்து.

Updated On :1 மே 2026, 1:30 am IST

போக்சோ வழக்கில் விவசாயிக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள அரியாங்கோட்டையைச் சோ்ந்த விவசாயி நல்லமுத்து (58). இவா் கடந்த 2.12.2022- இல் வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுதொடா்பாக திருவாடானை அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நல்லமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா, குற்றஞ்சாட்டப்பட்ட நல்லமுத்துவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து கொலை மிரட்டல் விடுத்ததற்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் கீதா முன்னிலையானாா்.