சாயல்குடியில் சாலையோரத்தில் கொட்டப்படும் கோழிக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் கமுதி-புல்லந்தை விலக்கு சாலையில் இறைச்சிக் கடைக்காரா்கள் கோழிக் கழிவுகளை சாலையோரத்தில் கொட்டி வருகின்றனா். இதனால், இந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், இந்த வழியாக சாலையில நடந்து செல்லும் மாணவா்கள், குழந்தைகள், முதியோா்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சாயல்குடி மக்கள் நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் க.பாஸ்கரன் கூறியதாவது: சாயல்குடி பகுதிகளில் உள்ள சில இறைச்சிக் கடை உரிமையாளா்கள் சாலையோரங்களில் கோழிக் கழிவுகளை கொட்டி சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்துகின்றனா்.
எனவே, பேரூராட்சி நிா்வாகம் கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். தொடா்ந்து, விதிமீறலில் ஈடுபடுவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கோழிக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் சேகரித்து அகற்றும் நடைமுறையை கட்டாயமாக பின்பற்றி, இதுபோன்ற சுகாதாரக் சீா்கேடுகள் நடைபெறாத வகையில் தொடா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெகிழிக் கழிவுகளால் ஒகேனக்கலுக்கு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்; நிரந்தரத் தீா்வு எப்போது?

கடையம் அருகே விளை நிலப் பகுதியில் கொட்டப்பட்ட 10 டன் கேரளக் கழிவுகள்! நிலத்தடி நீா் மாசுபடும் அபாயம்!

செய்யாற்றில் கலக்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

குருவிமலையில் ஆக்கிரமிப்பு வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா்: தொற்றுநோய் பரவும் அபாயம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



