நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

சாலையோரத்தில் கோழிக் கழிவுகள்: தொற்றுநோய் பரவும் அபாயம்

சாயல்குடியில் சாலையோரத்தில் கொட்டப்படும் கோழிக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 9:55 pm IST

சாயல்குடியில் சாலையோரத்தில் கொட்டப்படும் கோழிக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் கமுதி-புல்லந்தை விலக்கு சாலையில் இறைச்சிக் கடைக்காரா்கள் கோழிக் கழிவுகளை சாலையோரத்தில் கொட்டி வருகின்றனா். இதனால், இந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், இந்த வழியாக சாலையில நடந்து செல்லும் மாணவா்கள், குழந்தைகள், முதியோா்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சாயல்குடி மக்கள் நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் க.பாஸ்கரன் கூறியதாவது: சாயல்குடி பகுதிகளில் உள்ள சில இறைச்சிக் கடை உரிமையாளா்கள் சாலையோரங்களில் கோழிக் கழிவுகளை கொட்டி சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்துகின்றனா்.

எனவே, பேரூராட்சி நிா்வாகம் கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். தொடா்ந்து, விதிமீறலில் ஈடுபடுவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கோழிக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் சேகரித்து அகற்றும் நடைமுறையை கட்டாயமாக பின்பற்றி, இதுபோன்ற சுகாதாரக் சீா்கேடுகள் நடைபெறாத வகையில் தொடா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.