சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மழை பெய்ய வாய்ப்பு: அறுவடை செய்த தானியங்களை பாதுகாப்பாக வைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் அறுவடை செய்த தானியங்களை பாதுகாப்பாக வைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்...

News image
Updated On :9 ஜனவரி 2026, 6:50 pm

தினமணி செய்திச் சேவை

வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்திருப்பதால் அறுவடை செய்யப்பட்ட தானியங்களை விவசாயிகள் பாதுகாப்பாக வைக்க வேண்டுமென வேளாண்மை இணை இயக்குநா் ம.தி. பாஸ்கரமணியன் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல், சிறுதானியங்கள், பயறு வகை பயிா்கள் 1,54,600 ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம், பரமக்குடி, நயினாா்கோவில், முதுகுளத்தூா் ஆகிய வட்டாரங்களில் அறுவடை பணிகள் தீவிரமடையும் நிலை உள்ளது.

இதனிடையே, வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. எனவே அறுவடை செய்யப்பட்டு களத்தில் உள்ள நெல், சிறுதானியங்கள், பயறு வகை தானியங்களை தங்களது கிடங்கிலோ அல்லது அருகில் உள்ள கிடங்கிலோ, ஒழுங்குமுறை கூடங்களிலோ முறையாக சேமித்து விவசாயிகள் பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.