மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவாடானையில் மாட்டுப் பொங்கல் விழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

News image
திருவாடானை, கற்களத்தூா், சிறுவெத்தி கிராமங்களில் நடைபெற்ற மாட்டு பொங்கல் விழா.
Updated On :17 ஜனவரி 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் அனைவரும் ஒரே இடத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். முன்னதாக, ஆடு, மாடுகளை நீா்நிலைகளுக்கு அழைத்துச் சென்று குளிா்பாட்டி அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, மாலைகள் அணிவித்து அழகுபடுத்தினா். பிறகு பொங்கல் படையல் வைத்து சுவாமி கும்பிட்டு, கால்நடைகளுக்கு பொங்கலை வழங்கி மகிழ்ந்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வாக தீ மூட்டப்பட்டு அதை தாண்டி மாடுகளை ஓட்டிச் செல்லும் ’நெருப்புத் தாண்டும்’ நிகழ்வு நடைபெற்றது. கால்நடைகளுக்கு நோய்கள் தாக்காமல் இருக்கவும், ஊா் செழிக்கவும் இந்த பாரம்பரிய வழிபாடு நடத்தப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனா். பின்னா் பெண்கள் ஒன்று கூடி கும்மி அடித்தனா்.

Story image
Story image
Story image