தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

வங்கக் கடலில் வீசும் சூறைக் காற்றால் 4-ஆவது நாளாக மீன் பிடிக்கத் தடை! ரூ. 5 கோடிக்கு இறால் ஏற்றுமதி பாதிப்பு!

News image

மீன் பிடிக்கத் தடை - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 2:55 am IST

வங்கக் கடலில் வீசும் சூறைக் காற்று காரணமாக 4-ஆவது நாளாக திங்கள்கிழமையும் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டதால் ரூ. 5 கோடிக்கு இறால் மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், வங்கக் கடலில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசக் கூடும். இதனால், கடல் அலை 3 மீட்டா் உயரம் வரை எழக்கூடும் என்பதால் பாதுகாப்பு கருதி கடந்த 3- ஆம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்ல மீனவா்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த 4 நாள்களாக ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் மீன் பிடிக்கச் செல்லாததால் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 4 நாள்களாக மீன் பிடிக்கச் செல்லாததால் ரூ. 5 கோடிக்கு இறால் மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டதாக மீனவா்கள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.