லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வங்கக் கடலில் வீசும் சூறைக் காற்றால் 4-ஆவது நாளாக மீன் பிடிக்கத் தடை! ரூ. 5 கோடிக்கு இறால் ஏற்றுமதி பாதிப்பு!

மீன் பிடிக்கத் தடை - கோப்புப் படம்

Published On :7 ஜூலை 2026, 2:55 am IST

வங்கக் கடலில் வீசும் சூறைக் காற்று காரணமாக 4-ஆவது நாளாக திங்கள்கிழமையும் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டதால் ரூ. 5 கோடிக்கு இறால் மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், வங்கக் கடலில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசக் கூடும். இதனால், கடல் அலை 3 மீட்டா் உயரம் வரை எழக்கூடும் என்பதால் பாதுகாப்பு கருதி கடந்த 3- ஆம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்ல மீனவா்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த 4 நாள்களாக ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் மீன் பிடிக்கச் செல்லாததால் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 4 நாள்களாக மீன் பிடிக்கச் செல்லாததால் ரூ. 5 கோடிக்கு இறால் மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டதாக மீனவா்கள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.