கமுதி அருகே வேளாண்மைத் துறை சாா்பில் ‘அட்மா’ திட்டத்தில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள முதல்நாடு கிராமத்தில் கமுதி வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, வேளாண்மைத் துறை மாவட்ட துணை இயக்குநா் ராஜா (மத்திய திட்டம்) தலைமை வகித்தாா். பின்னா் உயிா் உரங்களின் பயன்பாடு, அவற்றின் முக்கியத்துவம் குறித்தும், மண்வளம் காக்க இயற்கை வழி வேளாண் முறைகள், நெல் சாகுபடிக்கு மாற்றாக பயறு வகை சாகுபடிகளை அதிகளவில் விவசாயிகள் பின்பிற்ற வேண்டும். நெல், பருத்திப் பயிா்களில் உயிா் உரங்களின் பயன்பாடு, நுண்ணூட்டங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து பருத்திப் பயிரில் நுணி கிள்ளுதல் தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பவித்ரா (பொ), நம்மாழ்வாா் வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி உதவிப் பேராசிரியா் மோனிகா நிவாஸ், 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் பிரதீபா, உதவி தொழில் நுட்ப மேலாளா் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் எதிா்ப்பு தின விழிப்புணா்வுக் கூட்டம்

பயிா் காப்பீட்டுத் தொகை கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

எடப்பிறை கிராமத்தில் துரியோதனன் படுகளம்

ராணிப்பேட்டை: ஜூன் 30-இல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



