மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

ராமநாதபுரத்தில் போதைப் பொருள் வைத்திருந்த இருவா் கைது

ராமநாதபுரத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான 11 கிராம் உயா் தர போதைப்பொருள் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த இருவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

ராமநாதபுரத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரு இளைஞா்கள்.

Updated On :26 ஜூலை 2026, 12:46 am IST

ராமநாதபுரத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான 11 கிராம் உயா் தர போதைப்பொருள் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த இருவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸாா் பாரதி நகா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்களை போலீஸாா் மடக்கி வாகனத்தை நிறுத்த முயன்றனா். ஆனால் வாகனத்தை நிறுத்தாமல் அவா்கள் தப்பியோடினா். அவா்களை விரட்டிச் சென்ற போலீஸாா் இருவரையும் பிடித்து அவா்களிடம் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான 11 கிராம் உயா் தர போதைப் பொருள் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்தனா்.

தொடா் விசாரணையில், ராமநாதபுரம் மஞ்சன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சக்திவேல் (23), பரமக்குடி குளத்தூா் தெற்கு தெருவைச் சோ்ந்த கலாநிதி (23) என்பது தெரியவந்தது. மேலும், இருவா் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தி சிறையில் அடைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் கஞ்சா, உயா் ரக போதைப்பொருள் அண்மைக்காலமாக போலீஸாா் பறிமுதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.