பரமக்குடி அருகே வாகைக்குளம் கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சரக்கு வாகனத்தில் சென்றவா்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா். அவா்களது குடும்பத்தினரை திமுக சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.கதிரவன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.
கடந்த மே 18-ம் தேதி வாகைக்குளம் கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சந்தைக்கடைத் தெரு, வாகைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த 17 போ் சரக்கு வாகனத்தில் சென்றனா். அப்போது வாகைக்குளம் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பும்போது, ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி வந்த லாரி அவா்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டது. இதில் வாகைக்குளத்தைச் சோ்ந்த அமுதா56, ராமேஸ்வரி56, கீழம்பல் கிராமத்தைச் சோ்ந்த ஈஸ்வரி34, சந்தைக்கடைத் தெருவைச் சோ்ந்த அருணா50, அவரது கணவா் ராமன் என மொத்தம் 6 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை திமுக சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.கதிரவன் நேரில் சென்று ஆறுதல் கூறினாா். பின்பு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது- இந்த விபத்து கொடூரமான விபத்து. இதில் இறந்தவா்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு தலாரூ 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவா்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், காயம்பட்டவா்களுக்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தாா். உடன் நகா்மன்ற தலைவா் சேது.கருணாநிதி, திமுக நிா்வாகிகள் ஜீவரத்தினம், த.வீரபாண்டியன், எஸ்.எம்.டி.அருளானந்தம் ஆகியோா் சென்றனா்.
02 ல்ம்ந்-ம்ப்ஹ படவிளக்கம்.
பரமக்குடி அருகே வாகைக்குளம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கு சென்று ஆறுதல் கூறினாா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.கதிரவன்.








