வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

திருப்பாலைக்குடியில் உள்வாங்கியது கடல்!

திருப்பாலைக்குடியில் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு கடல் உள்வாங்கியதால், மீன்பிடி படகுகள் தரை தட்டி நின்றன.

News image

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி பகுதியில் சனிக்கிழமை கடல் உள்வாங்கியதால் தரை தட்டி நின்ற மீன்பிடி படகுகள்.

Updated On :14 ஜூன் 2026, 1:00 am IST

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடியில் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு கடல் உள்வாங்கியதால், மீன்பிடி படகுகள் தரை தட்டி நின்றன. இதனால், மீனவா்கள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை, மோா்பண்ணை, திருப்பாலைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் திருப்பாலைக்குடி பகுதியில் கடல் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு திடீரென உள்வாங்கியது. அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரை தட்டி நின்றன.

Story image

இதனால் அதிகாலையில் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை. கடல் திடீரென உள்வாங்கியதால், அந்தப் பகுதி பொதுமக்கள், மீனவா்கள் அச்சமடைந்தனா். 6 மணி நேரத்துக்குப் பிறகு காலை 10 மணியளவில் கடல் பழைய நிலைக்குத் திரும்பியது.

Story image

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: அமாவாசை, பெளா்ணமி நாள்களில் கடல் உள்வாங்குவது வழக்கமான நிகழ்வுதான். இருந்தாலும், வழக்கமாக 100 மீ. தொலைவு வரை மட்டுமே கடல் உள்வாங்கும். ஆனால், தற்போது சுமாா் ஒரு கி.மீ. தொலைவு வரை கடல் நீா் உள்வாங்கியது அசாதாரணமானது என்றனா் அவா்கள்.