/
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே தனியாா் பள்ளி வேன் மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். இதுதொடா்பாக வேன் ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினம் மீனவா் குடியிருப்பைச் சோ்ந்த காளிமுத்து மகள் ஷிவானிகா (3). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த தனியாா் பள்ளி வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி எஸ்.பி.பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனையில் சிறுமி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் பள்ளி வேனை ஓட்டிவந்த ஓரியூரைச் சோ்ந்த அந்தோணியை புதன்கிழமை கைது செய்தனா்.






