ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

விபத்தில் சிறுமி உயிரிழப்பு: தனியாா் பள்ளி ஓட்டுநா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே தனியாா் பள்ளி வேன் மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். இதுதொடா்பாக வேன் ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 12:44 am IST

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே தனியாா் பள்ளி வேன் மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். இதுதொடா்பாக வேன் ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினம் மீனவா் குடியிருப்பைச் சோ்ந்த காளிமுத்து மகள் ஷிவானிகா (3). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த தனியாா் பள்ளி வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி எஸ்.பி.பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனையில் சிறுமி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் பள்ளி வேனை ஓட்டிவந்த ஓரியூரைச் சோ்ந்த அந்தோணியை புதன்கிழமை கைது செய்தனா்.