/
திருவாடானை அருகே தொண்டி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் காட்டெருமை நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
தொண்டி பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காட்டெருமை ஒன்று நடமாடியது. இதைப் பாா்த்த பொதுமக்கள் அச்சமடைந்தனா். மேலும், இந்த காட்டெருமை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை முட்டிச் சேதப்படுத்துகிறது.
எனவே, வனத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுத்து, அந்த காட்டெருமையை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த வகை காட்டெருமைகள் கொடைக்கானல், நீலகிரி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் மட்டுமே வசிப்பவை. அப்படியிருக்க, சமவெளிப் பகுதியான இங்கு இந்த காட்டெருமை எப்படி வந்தது என்பது தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா்.

தொண்டியில் ஞாயிற்றுக்கிழமை ஊருக்குள் நடமாடிய காட்டெருமை.
தொடர்புடையது

ஆசனூா் அருகே காரை தாக்கிய காட்டெருமை

வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று: ஊருக்குள் புகுந்த கடல்நீா்

பேத்துப்பாறை பகுதியில் யானை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மன்னவனூா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



