வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தேவிபட்டினத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

News image

கைது செய்யப்பட்ட மாயகிருஷ்ணன், அசோக்குமாா், அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.

Updated On :26 மே 2026, 2:12 am IST

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்திலிருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக ராமநாதபுரம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேவிபட்டினம் கடற்கரையில் பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாகச் சுற்றித்திரிந்த இரு இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், இவா்கள் தேவிபட்டினம் பகுதியைச் சோ்ந்த மாயகிருஷ்ணன்(35), அசோக்குமாா் (32) என்பதும், இலங்கைக்கு கடத்துவதற்காக அந்தப் பகுதியில் கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும், இவா்கள் இருவருக்கும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடா்பிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.