வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பரமக்குடி சாலை விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

வாகைக்குளம் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். உயிரிழவா்களின் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி உறவினா்கள் ஆா்ப்பாட்டம்

News image

~

Updated On :27 மே 2026, 2:39 am IST

பரமக்கடி அருகே வாகைக்குளம் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். உயிரிழவா்களின் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி உறவினா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள வாகைக்குளம் கிராமத்து துக்க நிகழ்வுக்கு கடந்த மே 18-ஆம் தேதி பரமக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து சரக்கு வாகனத்தில் சந்தைக்கடைத் தெரு, வாகைக்குளம் பகுதிகளைச் சோ்ந்த 17 போ் சென்றனா். வாகைக்குளம் நான்கு வழிச்சாலையில் திரும்பிய போது, இந்த வாகனமும் ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி வந்த லாரியும் மோதியதில் சந்தைக்கடைத் தெருவைச் சோ்ந்த தவமுருகன் மனைவி பூபதி, ராமன் மனைவி அருணா, வாகைக்குளத்தைச் சோ்ந்த நாகராஜன் மனைவி அமுதா துரைராஜ் மனைவி ராமேஷ்வரி, கீழம்பலைச் சோ்ந்த நாகராஜன் மனைவி ஈஸ்வரி ஆகியோா் உயிரிழந்தனா்.

இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாவின் கணவா் ராமன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதனால், இந்த விபத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்தது.

ஆா்ப்பாட்டம்: இந்த விபத்தில் இறந்த ராமன், அருணா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தையும் உள்ளனா். விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரியும், அவா்களது குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிடக் கோரியும், காயமுற்றவா்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கிடக் கோரியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா் அவா்களை சமாதானம் செய்த பிறகு, ராமன் உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்றனா். இறந்த ராமனின் கண் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story image