/
முதுகுளத்தூா் பகுதியிலிருந்து ஏராளமான பக்தா்கள் 36-ஆவது ஆண்டாக செவ்வாய்க்கிழமை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை புறப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்துள்ள கிடாத்திருக்கை கிராமம், அதைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து 150-க்கு மேற்பட்ட திருச்செந்திலாண்டவா் பாதயாத்திரை காவடி சேவைக் குழு பக்தா்கள் குருநாதா் போஸ்பாண்டிசாமி தலைமையில் காவடி எடுத்து, கையில் வேல் ஏந்தி, முருகக் கடவுளின் பஜனை பாடல்கள் பாடியவாறு, பாதயாத்திரை பயணத்தை தொடங்கினா்.
இந்த பக்தா்களை கிராமப் பொதுமக்கள் வழி நெடுகிலும் நின்று காவடியைத் தொட்டு வணங்கி, வழி அனுப்பி வைத்தனா். இந்த பாதயாத்திரை குழுவினா் திருச்செந்தூரில் மே 30 -ஆம் தேதி நடைபெறும் வைகாசி விசாகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்தனா்.
தொடர்புடையது

பாதயாத்திரை பக்தா்கள் மீது பைக் மோதல்! வாகன ஓட்டி உயிரிழப்பு!

சாத்தையா அய்யனாா் கோயில் திருவிழா: காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்த பக்தா்கள்

எருக்கூா் கோயிலில் அன்னப்படையல் விழா! பக்தா்கள் காவடி எடுத்து வழிபாடு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



