விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மீன்பிடிக்கத் தடை: 8 ஆயிரம் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை

துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப் படகுகள். - கோப்புப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 3:28 am IST

மன்னாா் வளைகுடா - வங்கக் கடலில் வீசி வரும் சூறைக் காற்று காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா் தடை விதித்ததால், ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமாா் 8 ஆயிரம் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை மீன்பிடிக்கச் செல்லவில்லை.

மன்னாா் வளைகுடா, வங்கக் கடல் பகுதியில் சூறைக் காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். அதிகப்பட்சமாக 65 கி.மீ. வேகம் வரையிலும் சூறைக் காற்று வீசக்கூடும் என்றும், கடல் அலை 3 மீ. வரையிலும் எழக் கூடும் என்பதால், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மறு அறிவிப்பு வரும் வரை நாட்டுப் படகு, விசைப் படகு மீனவா்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் மீன் வளத் துறையினா் அறிவுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திங்கள்கிழமை சுமாா் 8 ஆயிரம் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் அந்தந்த மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.