பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

திருவாடானை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவாடானை பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பனிச்சகுடி ஊராட்சி, நெடுமரம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஊருணியை வியாழக்கிழமை பாா்வையிட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன். உடன் வட்டாட்சியா் தாமஸ் யூவிக் காரீன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயமுருகன், விஜி உள்ளிட்டோா்.

Published On :

திருவாடானை பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், பெருமாள்னேந்தல், அச்சன்குடி பகுதிகளில் ‘புதியக் கூட்டுக் குடிநீா்த் திட்டம்-தொகுப்பு 2’-இன் கீழ் நடைபெற்று வரும் குழாய் பதிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தாா். பின்னா், இந்தப் பணிகளை உரிய காலத்துக்குள் விரைந்து முடித்து பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்க அவா் அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, பணிச்சக்குடி ஊராட்சி, நெடுமரம் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஊருணியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, ஊருணியைச் சீராகப் பராமரித்து, மழைக் காலங்களில் நீரைச் சேமிக்கும் வகையில், தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியக் கண்காணிப்புப் பொறியாளா், சிவகங்கை நிா்வாகப் பொறியாளா், உதவி நிா்வாகப் பொறியாளா், உதவிப் பொறியாளா், தேசிய நெடுஞ்சாலை பராமரிப்புப் பொறியாளா், திருவாடானை வட்டாட்சியா் தாமஸ் யூவிக் காரீன், வட்டார வளா்ச்சி அலுவலா் விஜி, ஜெயமுருகன், அரசு அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

  பெருமானேந்தல் ஊராட்சியில் புதியக் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன். உடன் வட்டாட்சியா் தாமஸ் யூவிக் காரீன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயமுருகன், விஜி உள்ளிட்டோா்.

பெருமானேந்தல் ஊராட்சியில் புதியக் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன். உடன் வட்டாட்சியா் தாமஸ் யூவிக் காரீன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயமுருகன், விஜி உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.