குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

தவ்ஹித் ஜமாஅத் சார்பில் நல்லொழுக்க பயிற்சி முகாம்

சிவகங்கை மாவட்ட தவ்ஹித் ஜமாஅத் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 12:12 am IST

சிவகங்கை மாவட்ட தவ்ஹித் ஜமாஅத் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

 முகாமுக்கு மாநில பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லா தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். கோடை காலமாக இருப்பதால் பொது மக்களுக்கு சேவை புரியும் வகையில் தண்ணீர்பந்தல் அமைப்பது, நிழற்குடை அமைப்பது குறித்த பயிற்சியும் ஆலோசனையும் வழங்கப்பட்டது.

  இதேபோல் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டி பயிற்சி வகுப்புகளும், கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

 கூட்டத்தில் மத்தியில் முஸ்லீம்களுக்கு 10 சதவீதமும், மாநிலத்தில் 7சதவீதமும் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.