பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து சிவகங்கையில் காங்கிரஸ் மகளிர் பிரிவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலர் ஸ்ரீவித்யா கணபதி தலைமை வகித்தார். கட்சியின் சிவகங்கை மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இதில்,பாஜக ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததைக் கண்டித்தும்,பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிக்களுக்கு தக்க தண்டனை வழங்க தவறும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில்,முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுந்தரம்,அருணகிரி, மாவட்டத் துனைத் தலைவர் சண்முகராஜன்,முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரெத்தினம்,சிவகங்கை நகர் தலைவர் பிரபாகரன்,வட்டார தலைவர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவின் 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்கிறார்களா?

நாசிக் டிசிஎஸ் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட நிதா கான் கைது!

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மழை!

எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! - ஜோதிமணி
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

