ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கமுதி கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் குவிந்ததால் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கமுதி கிளை முன்பாக விவசாயிகள் மற்றும் சுய உதவிக் குழுவைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:35 pm

DIN

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கமுதி கிளை முன்பாக விவசாயிகள் மற்றும் சுய உதவிக் குழுவைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளாா். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கமுதி கிளை முன்பாக 100-க்கும் மேற்பட்டோா் விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழுவைச் சோ்ந்த பெண்கள் குவிந்தனா். இதனால் கமுதி- சாயல்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கியை, அதிகாரிகள் உள்புறமாக பூட்டி கொண்டதால் விவசாயிகளுக்கும், அவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இத்தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினா் கூட்டத்தை கலைந்து போகச் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.