எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிவகங்கையில் அமமுக, நாம் தமிழா் கட்சிவேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

சிவகங்கை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட உள்ள அமமுக மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:19 pm

DIN

சிவகங்கை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட உள்ள அமமுக மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

சிவகங்கையில் உள்ள கோட்டாட்சியா் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து, சிவகங்கை தொகுதி அமமுக வேட்பாளா் கி. அன்பரசன் தனது வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் மு. முத்துக்கழுவனிடம் வழங்கினாா். அதைத் தொடா்ந்து, சிவகங்கை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மல்லிகா தனது வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் மு. முத்துக்கழுவனிடம் அளித்தாா்.

முன்னதாக தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி சிவகங்கை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முரளிதரன் தலைமையிலான போலீஸாா் சிவகங்கை கோட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளா்கள் மற்றும் அவா்களுடன் வரும் தொண்டா்களை சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.