எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருப்பாச்சேத்தி அருகே பைனான்சியர் வெட்டிக்கொலை: அண்ணன்-தம்பி தலைமறைவு

திருப்பாச்சேத்தி அருகே புதன்கிழமை சொந்த கிராமத்திற்கு பெற்றோரை பார்க்க வந்த பைனான்சியரை முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிய அண்ணன் தம்பியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

News image
திருப்பாச்சேத்தி அருகே பைனான்சியர் வெட்டிக்கொலை: அண்ணன்-தம்பி தலைமறைவு
Updated On :15 செப்டம்பர் 2021, 11:09 am

DIN

திருப்பாச்சேத்தி அருகே புதன்கிழமை சொந்த கிராமத்திற்கு பெற்றோரை பார்க்க வந்த பைனான்சியரை முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிய அண்ணன் தம்பியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே வேம்பத்தூர் லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பதிவாசகம் மகன் அழகுமலை (45). இவர் தற்போது குடும்பத்துடன் சிவகங்கையில் வசித்து வருகிறார்.

அழகுமலை சென்னையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி வேம்பத்தூர் லட்சுமிபுரம் கிராமத்தில் வசித்து வரும் அழகுமலையின் தங்கை மாற்றுத்திறனாளியான மாலாதேவி அங்குள்ள சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இதே பகுதியைச் சேர்ந்த ராஜா மனைவி ராமு என்ற ராஜலட்சுமியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுசம்பந்தமாக திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதன் அடிப்படையில் ராஜலட்சுமி இவரது கணவர் ராஜா உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இருந்து சிவகங்கை வந்திருந்த அழகுமலை வேம்பத்தூர் லட்சுமிபுரம் கிராமத்திலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு அருகே வந்தபோது அங்கு மறைந்திருந்த  ராஜா மற்றும் அவரது தம்பி சுந்தரம் ஆகியோர் அழகுமலையை வழிமறித்து அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

இந்தக் கொலை சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருப்பாச்சேத்தி காவலர்கள் வழக்கு பதிந்து தலைமறைவாகிய ராஜா, சுந்தரம் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.