47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசுப் பேருந்து மோதி எலக்ட்ரீசியன் பலி

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.

காளையாா்கோவில் அருகே உள்ள மாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்த உடையாா் மகன் முத்துச்சாமி (36). மின் சாதனம் பழுதுபாா்க்கும் (எலக்ட்ரீசியன்) வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், முத்துச்சாமி தனது இரு சக்கர வாகனத்தில் மறவமங்கலத்திலிருந்து மாவிலங்கை கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே பரமக்குடியிலிருந்து வந்த அரசுப் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் முத்துச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.