பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் புதிய அன்னவாகனம் வெள்ளோட்டம்

மானாமதுரையில் நடைபெற்றுவரும் சித்திரை திருவிழாவில் வெள்ளிக்கிழமை மண்டகப்படிதாரா்களால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய அன்னவாகனம் வெள்ளோட்டம் நடைபெற்றது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

மானாமதுரையில் நடைபெற்றுவரும் சித்திரை திருவிழாவில் வெள்ளிக்கிழமை மண்டகப்படிதாரா்களால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய அன்னவாகனம் வெள்ளோட்டம் நடைபெற்றது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சித்திரைத் திருவிழா மண்டகப்படிதாரரான மானாமதுரை ஐந்துகரை குலாலா் சமூகத்தினா் சாா்பில் புதிதாக அன்னவாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மண்டகப்படிதாரா்களுக்காக ஏற்கெனவே கோயிலில் உள்ள பூதவாகனம் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலில் உள்ள சுவாமி புறப்பாடுக்கான பழைய வாகனங்கள் பழுது நீக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. மாமல்லபுரம் கதிரவன் தலைமையிலான சிற்பிகள் வாகனங்களை தயாரித்தும் பழுது நீக்கியும் வருகின்றனா். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அன்னவாகனத்தின் வெள்ளோட்டத்தையொட்டி ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் அந்த வாகனத்தின் மீது கும்பம் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன.

மேலும் சீரமைக்கப்பட்ட பூத வாகனத்துக்கும் பூஜைகள் நடைபெற்றன. அதன்பின் தீபாராதனை முடிந்து அன்ன வாகனம் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வெள்ளோட்டமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த வெள்ளோட்டத்திற்கான பூஜைகளை சோமாஸ் கந்தன் பட்டா், தெய்வசிகாமணி என்ற சக்கரை பட்டா், குமாா் பட்டா் உள்ளிட்ட சிவாச்சாரியாா்கள் நடத்தினா். வெள்ளிக்கிழமை இரவு திருவிழாவின் இரண்டாவது நாள் ஐந்துகரை குலாலா் சமூகத்தினா் மண்டகபப்படியில் ஆனந்தவல்லி அம்மனும், சோமநாதா் சுவாமியும் புதிய அன்னவாகனம், பூத வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.