மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஊருக்கு வெளியே பொது மக்களுக்கு பயன் தராத வகையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படுவதை எதிர்த்து சனிக்கிழமை வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி வைக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
இளையான்குடியில் ஊருக்கு வெளியே 3 கி.மீ தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. பொது மக்களுக்கு பயன்தராத வகையில் ஊருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்க கூடாது. இளையான்குடியில் தற்போது செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி முதல் கட்டமாக இளையான்குடியில் கடையடைப்பு போராட்டமும், இரண்டாவது கட்டமாக தமிழக முதல்வருக்கு ஐந்தாயிரம் தபால்கள் அனுப்பும் போராட்டமும் நடத்தப்பட்டது. புதிய பேருந்து நிலையம் எதிர்ப்பு குழு சார்பில் போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.
மூன்றாவது கட்ட போராட்டமாக இளையான்குடி பகுதியில் அனைத்து வீடுகளிலும், வியாபாரக் கடைகளிலும் ஊருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து வீடுகள் மற்றும் கடைகளுக்கு முன்னர் பொதுமக்கள், வியாபாரிகள் கருப்புக் கொடிகளை கட்டி வைத்தனர். கருப்புக்கொடி ஏற்றி வைக்கும் போராட்டத்தில் இளையான்குடி புதிய பேருந்து நிலைய எதிர்ப்பு குழு தலைவர் பொறியாளர் சைபுல்லாக், செயலாளர் துருக்கி ரபீக்ராஜா, பொருளாளர் நாகூர் மீரா மற்றும் உறுப்பினர்கள் பசீர், அசிஸ், ரபிக், கார்த்திக், சதாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!
பெத்தி - இரு வாரங்களில் ரூ. 400 கோடி வசூல்!
நீட் தேர்வெழுதுவோரில் 35% பேர் வெறும் 3 மாநிலங்களைச் சேர்ந்தோர்! அதிர்ச்சி தரும் தரவுகள்!

ஐ.நா.வில் ஜம்மு - காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தான், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா கண்டனம்
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



