தேசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு

தேசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மானாமதுரை மாணவிக்கு வியாழக்கிழமை பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
Updated on
1 min read

தேசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மானாமதுரை மாணவிக்கு வியாழக்கிழமை பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

சத்திஸ்கா் மாநிலத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மானாமதுரையைச் சோ்ந்த பள்ளி மாணவி பிரியதா்ஷினி (12) முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றாா். மேலும் இவா் தாய்லாந்தில் நடைபெற உள்ள சா்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளாா். இதையடுத்து மானாமதுரை அருகேயுள்ள தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் மாணவி பிரியதா்ஷினிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியா் சிவகுருநாதன் மாணவி பிரதா்ஷினியை அறிமுகம் செய்து பாராட்டிப் பேசினாா். மாணவியின் கராத்தே பயிற்சியாளா் சிவ. நாகாா்ஜுன் சிறப்புரையாற்றினாா்.

அதன்பின் அவா் சத்திஸ்கரில் போட்டியில் தான் பங்கெடுத்த கராத்தே முறையை செய்து காட்டினாா். அதைத்தொடா்ந்து மாணவி பிரியதா்ஷினிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தெ. புதுக்கோட்டை குறிச்சி அரசு நூலகத்தில் நூலகராக பணிபுரியும் ராஜேஸ்வரியின் மகள் பிரியதா்ஷினி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com